அன்புடன் வரவேற்கிறோம்! புனித சந்தனமாதாவின் 87-ம் ஆண்டு திருவிழா!(26-07-2025 & 27-07-2025) புனித சந்தனமாதா திருத்தலம், உலகரட்சகபுரம், இராங்கியம்.

நாட்டுத் துயர் நீங்க நலமே தினம் ஓங்க

மாட்டுத் தொழுவத்தில் வந்துதித்த இயேசுபிரான்

அன்னை மரியாளின் அற்புதத்தாயே! அன்னம்மாளே! நின்

கன்னல் வழிநடந்தால் காசினியில் துயரேது!

பேரன்புச் சான்றோரே! பெரியோரே!

உலகமெல்லாம் ஈடேற ஒப்பற்ற கடவுளின் திருக்குமாரனை ஈன்றவளின் தாயும் உள்ளன்போடு வழிபடுவோர்க்கு உயர்வுகள் அனைத்தும் தருபவளும் தன்னை அடைக்கலம் என அடைந்தோர்க்குத் துன்பம் போக்கி இன்ப வாழ்க்கை வழங்குபவளும், தஞ்சம் என வந்தோரின் நெஞ்சில் நிறைந்த கவலைகளை நெருப்பினைச்சார்ந்த பஞ்சு
என நீக்குபவளும், ஊமையரும் வாய்பேசவும், பிறவிக் குருடரும் கண்ணொளி பெறவும் கண்கண்ட தெய்வமாக இருந்து பேரருள் புரிபவள்

புனித சந்தனமாதா

உலகரெட்சகர்புரம்,
இராங்கியம்.

CIMG1025.JPG  
                                                                                

புனித சந்தனமாதா அன்னைக்கு மன்றாட்டு

 

ஓ! புனித சந்தனமாதா அன்னையே, நீர் அருள் நிறைந்தவள், உம் கரங்களில் என்னை ஒப்படைக்கிறேன். திக்கற்றப்பிள்ளை என்னையும், என் குடும்பத்தையும் ஆசீர்வதியும். நான் உம்மை அழைக்கும்போதெல்லாம் எனக்கு உதவி செய்ய விரைந்து வாரும். இடைவிடா சகாய அமைதியையும், நிறைவாகத் தாரும் அம்மா. என் உழைப்பையும், முயற்ச்சிகளையும், தொழிலையும் ஆசிர்வதித்து, வெற்றிபெறச் செய்யும் அம்மா. பிள்ளைகள் ஞானத்திலும், அறிவிலும் வளர்ந்திட வேலை வாய்ப்புகள் பெற்றிட குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடைபெற, குறையுள்ளோர் குழந்தைபாக்கியம் அடைந்திட தயை செய்யும் அம்மா. நீதி நேர்மை நிலைக்கவும், வறுமை, பினிகள் ஒழியவும் மனித நேயம் வளரவும், மனித மாண்பு சிறக்கவும் அருள்பொழியும் அம்மா. உம்மைப்போலவும் உம் திருமகளின் மகனைப் போலவும்நான் வாழச்செய்யும் அம்மா. உம் திருஉருவத்தை வணங்கும் எனக்கு துணையாக வாரும் அம்மா. இடைவிடா புனித சந்தனமாதா அன்னையே மரியே எந்தன் அபயமே ஆமென்.

 

 

Recent Galleries

Recent News

Dear devotees,


புனித சந்தனமாதாவின் 87-ம் ஆண்டு திருவிழா அழைப்பிதழ்!
Image 1 0f 2 Image 1 0f 2

18.07.2025

மாலை 6-00 மணியளவில் தஞ்சை மறை மாவட்ட எல். சகாயராஜ் அவர்களால் புதிய கொடிமரம் புனிதப்படுத்தும் விழா, கொடியேற்றம் மற்றும் திருப்பலி நிறைவேற்றுவார்கள்.

19.07.2025 to 25.07.2025

இரவு 7.00 மணிக்கு நவநாள் திருப்பலி அதிவிமரிசையாக நடைபெறும்.

நன்கொடை வழங்க

BANK OF BARODA-RANGIAM

Account Name :
RANGIAM SANTHANAMATHA RC TRUST
Account No     : 70070100012350
IFSC CODE     : BARB0VIRANG

 

For further details please contact :

Secretary:
Arockiyasamy, Cell : +919445955566

Treasurer:
Charles, Cell : +919965724130